ஜெயலலிதா மரணம்: இளவரசி மகன் விவேக்கிற்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன் இளவரசி மகன் விவேக் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம்: இளவரசி மகன் விவேக்கிற்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன் இளவரசி மகன் விவேக் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது குறித்த உண்மை நிலையை வெளிக் கொணர நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பல தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். 

இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், தீபாவின் கணவர் மாதவன்,தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

இந்நிலையில் விசாரணை ஆணையம் முன், வரும் 13 அல்லது 14ஆம் தேதி விவேக் மற்றும் பாலாஜியும், 12ஆம் தேதி ஐய்யப்பனும், 15ஆம் தேதி கார்த்திகேயனும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com