முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து

முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததன் காரணமாக, பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து


சென்னை: முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததன் காரணமாக, பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் மறுதேர்வு நடைபெறும் என்றும், ஏற்கனவே நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை, தேர்வில் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக தேர்வெழுத விரும்புவோர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com