லஞ்ச வழக்கில் கைதான ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், எஸ்ஐ லூர்து ஜெயராஜ் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டி.எஸ்.பி. ப.தனராஜன் மற்றும் எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுட்டுள்ளார். இதையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிஎஸ்பி தன்ராஜின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.