தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்: வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்: வானிலை மையம் சொல்வது என்ன?

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது. காலநிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் ,  சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது.

இதன் விளைவாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com