ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவின் சிறப்பை போற்றும் வகையில் பிரமாண்டமான நிகழ்ச்சிகள் நடைபெறும். 

ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தமிழக அரசு உள்ளது. 

தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அதிமுகவினருக்கு அரசு வேலை என செங்கோட்டையன் கூறினார். வெளிப்படை தன்மையுடன்தான் அரசு சார்ந்த வேலைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com