ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: விவேக் ஜெயராமன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் இன்று ஆஜரானார். 
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: விவேக் ஜெயராமன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விவேக் ஜெயராமன் இன்று ஆஜரானார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது குறித்த உண்மை நிலையை வெளிக் கொணர நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பல தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. 

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி இளவரசியின் மகனும் ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவும் ஆன விவேக் ஜெயராமன் தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com