சென்னை: ஜெயலலிதா கைரேகை குறித்து விளக்கம் அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
ஏற்கனவே டிசம்பர் 7 மற்றும் ஜனவரி 25ம் தேதிகளில் விசாரணை ஆணையம் முன்பு, அரசு மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
இடைத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களின் மனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்த மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு, இன்று 3வது முறையாக ஆஜராகி கைரேகை பெற்றது தொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.