சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது.
அம்மா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து ஜெயலலிதா உருவப்படத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து ஜெயலலிதாவின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி அவர்கள் மரியாதையும் செலுத்தினர்.
முன்னதாக ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் அண்மையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.