காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மூப்பனாரிடம் உதவியாளராக இருந்த பார்த்தசாரதி (68) மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்த பார்த்தசாரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை காலை அவர் மாரடைப்பால் காலமானார்.
வங்கியில் பொது மேலாளராக இருந்ததுடன், 1980 முதல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜி.கே.மூப்பனாரின் உதவியாளராகச் செயல்பட்டவர். பார்த்தசாரதியின் உடல் பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பார்த்தசாரதிக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை காலை10.30 மணியளவில் நடைபெற உள்ளது.