ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜரானார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம் இதுவரை ஜெயலலிதாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது.
இந்நிலையில், சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திகேயனுக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பியது. இதையடுத்து, அவர் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகியுள்ளார். போயஸ் கார்டனில் சசிகலா இருந்தபோது அவரது உதவியாளராக கார்த்திகேயன் பணியாற்றினார்.