புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரியில் இருந்து பெங்களுருக்கு விமான சேவை 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், 2014-இல் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி - பெங்களூரு இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, புதுச்சேரி - பெங்களுரு இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கியது. 78 இருக்கைகள் கொண்ட பம்பாரிடியர் விமானம்
பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தது. பின்னர், இங்கிருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு 12.10-க்கு பெங்களூரை அடைந்தது. புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலம், கோவை, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.