ஆத்தூர்: ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா ஏரியில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒண்டிமிட்டா ஏரியில் 5 உடல்களை, அம்மாநில காவல்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அவர்களது மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், அவர்கள் தமிழர்கள் என்பது தெரிய வந்தது.
செம்மரம் வெட்ட வந்தவர்களா என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் 5 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
அதாவது, அடியனூர் முருகேன், ஆவாரை கருப்பண்ணன் என்பதும், மற்ற மூவரும் கொலாக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடப்பா அரசு மருத்துவமனைக்குக் கொண்ட செல்லப்பட்ட 5 உடல்களும் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், பிரேத பரிசோதனை உடனடியாக தொடங்கியது.