ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டித்தனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பினர்.

கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டித்தனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பினர்.
சனிக்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 
மேலும் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com