கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டித்தனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பினர்.
சனிக்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
மேலும் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பினர்.