காவிரி விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது

காவிரி விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. 

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், மார்க்சிஸ்ட்டின் கே. பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் கூட்டத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பங்கேற்றுள்ளனர். 

காவிரி விவகாரம் தொடர்பாக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரை, உச்சநீதிமன்றம் 177.25 டிஎம்சி நீராக குறைத்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக முதல்வர் தெரிவித்ததுடன், இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com