திருமங்கலம்: மதுரை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் திட்டியதால் நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பில் பயின்று வரும் மாணவிகள் நான்கு பேரை, சரியாக படிக்கவில்லை என்று வகுப்பு ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தமடைந்த அவர்கள் நால்வரும் எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களைக் கண்ட மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.