ஜெயலலிதாவின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைக்க உள்ளனர்.
ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்படுவதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகம்.
ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்படுவதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகம்.

அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைக்க உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் திறப்பு விழா ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப். 24 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று சிலையை திறந்து வைக்க உள்ளனர்.
அதிமுக நாளேடு: 'நமது புரட்சித் தலைவர் அம்மா' என்ற தினசரி நாளிதழையும் முதல்வரும், துணை முதல்வரும் துவக்கி வைக்க உள்ளனர். ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த தின விழாவை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com