கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் தீவிர அரசியல் களத்துக்கு தயாராகி வருகிறார். இதன் முதற்கட்டமாக மாவட்டம் மற்றும் நகர, ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக கடந்த இரு நாள்களாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.
இதையடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள கடலூர், அன்னகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம் , பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், நெல்லிக்குப்பம், , சிதம்பரம் உள்ளிட்ட நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு: இதேபோல் விழுப்புரம் மாவட்ட அமைப்பு மற்றும் திருவெண்ணைநல்லூர், கோலியனூர், திண்டிவனம், கண்டமங்கலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள்அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போல் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.