சென்னை: தமிழக வளர்ச்சித்திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சென்னை மற்றும் புதுச்சேரியில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஞாயிறன்று மாலை குஜராத் மாநிலம் சூரத் திரும்புகிறார். அதற்காக மாலை அவர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்பொழுது அங்கு அவரை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடங்கிய அமைச்சர்கள் குழு வரவேற்றது. அப்பொழுது தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி நேரில் அளித்து வலியுறுத்தினார்.