தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்ப்பது நியாயமல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆய்வு செய்வதால் ஆளுநர் ஆட்சி என்று சொல்லக்கூடாது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் ஆளுநர் ஆய்வு செய்வதில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
ஆர்.கே.நகர் தேர்தல் விதிமுறைப்படி இல்லாமல் நிதிமுறைப்படி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.