பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர புதன்கிழமை (ஜன.3) முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பகுதி நேர பி.இ. படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதில் பட்டப் படிப்புகளில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் மட்டுமே சேர்க்கை பெற முடியும்.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.annauniv.edu/bept2018 என்ற இணையதளத்தில் புதன்கிழமை முதல் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.