பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 870 பட்டாசு ஆலைகள் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிவகாசியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தீப்பெட்டி ஆலைகள், அச்சகம் என அனைத்தும் இன்று சிவகாசியில் மூடப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலில் நேரடியாக சுமார் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் பட்டாசு பேக்கிங் செய்ய தேவைப்படும் காகித அட்டைப்பெட்டி உற்பத்தி, பட்டாசுக்கு தேவையான லேபிள்கள் அச்சிடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.