பேரவைக் கூட்டம்: அதிமுக எம்எல்ஏக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதல்வர் சொன்னது ஏன்?

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 104 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
பேரவைக் கூட்டம்: அதிமுக எம்எல்ஏக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதல்வர் சொன்னது ஏன்?

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 104 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

ராயப்பேட்டையில் ஒரு மணி நேரம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து எம்எல்ஏக்களும் கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். சட்டபேரவையில் தினகரன் பேசினால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அதனை பெரிதுபடுத்த வேண்டாம்.

எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறினார்.

இவ்வாறு, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் சொல்லக் காரணம் என்னவென்றால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும். எனவே, அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்தால்தான் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என்பதால் முதல்வர் இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com