தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் ( இதுவரை வகித்து வந்த பொறுப்பு):
எம்.துரை-தமிழக ஆளுநர் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. (கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்).
பிரவீண்குமார் அபினபு-சென்னை சிபிசிஐடி எஸ்.பி. (தமிழக ஆளுநர் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி.).
என்.ஸ்ரீநாதா-கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (சென்னை சிபிசிஐடி எஸ்.பி.).
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.