கரூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு ஜன. 22 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளைத் தெருவில் பதுங்கியிருந்த சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா (53), சந்திரா (46) ஆகிய இருவரையும் க்யூ பிராஞ்ச் பிரிவு போலீஸார் கடந்த 2016-ல் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இந்த மாவோயிஸ்ட்களுக்கு உதவியதாக மதுரை மாவட்டம், ஆலங்குளம் அன்புநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனை (35) கடந்தாண்டு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மூவருக்கும் ஜன. 22 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.