வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கல் நாளன்று செவ்வாய்கிழமை திறந்திருக்கும். மேலும் பொங்கல் திருவிழா தொடர் விடுமுறையை முன்னிட்டு காணும் பொங்கலன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் எதிர்பார்க்கப்படுவதால் அன்று காலை 8 மணிக்கு பூங்கா திறக்கப்படும் என்பதையும், நுழைவுச் சீட்டுகள் வழங்க 30 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.