காற்றின் வேக மாறுபாடு: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மையத்தின் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: மன்னார் வளைகுடா பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. 
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட காலநிலை காணப்படும். சென்னையில் மேகமூட்டம் காணப்படும் என்றார் அவர்.
ஆனைக்காரன்சத்திரத்தில் 100 மி.மீ.: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் , நாகை மாவட்டம், ஆனைக்காரன் சத்திரத்தில் 100 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. சீர்காழி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தலா 70 மி.மீ., சிதம்பரத்தில் 60 மி.மீ., மயிலாடுதுறை, சேத்தியாதோப்பில் தலா 50 மி.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் 40 மி.மீ., திருவாரூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், அரியலூர் மாவட்டம், செந்துறை, வேதாரண்யத்தில் தலா 20 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com