ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க கோரி சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தாக்கல் செய்தார்.