jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வகை செய்ய சட்டத் திருத்தம்

By DIN  |   Published on : 13th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

jayakumar

அனைத்து மீனவர்களையும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தயார்படுத்திட, கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில், தூத்துக்குடி மீனவர் பிரச்னை குறித்து, திமுக உறுப்பினர் கீதா பிரச்னை கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி விசைப் படகு மீனவர்கள் கடந்த நான்கு மாதங்களாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்:
தூத்துக்குடியில் 4 ஆயிரம் நாட்டுப் படகுகளும், 400 விசைப் படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதில், 150 படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் படகுகளைச் சார்ந்தவர்களே மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். நாட்டுப் படகு மீனவர்களுக்கும், அவர்களுக்கும் இடையேயுள்ள பிரச்னையே இதற்குக் காரணம். இந்தப் பிரச்னை குறித்து, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் 150 படகினைச் சேர்ந்த மீனவர்கள், உயர் 
நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் உத்தரவு கிடைத்தபிறகு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு எட்டப்படும்.
நமது மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தயார்படுத்திட வேண்டும். இதற்காக, அதிகசக்தி திறன் கொண்ட மோட்டார்களுடன் கூடிய படகுகளை இயக்க அனுமதிப்பது போன்ற அம்சங்களுக்காக கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்திட வேண்டும். எனவே, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்படிச் செய்தால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்றார்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்