கருணாநிதிக்கு வாழ்த்துக் கூறிய ஓ.பன்னீர்செல்வம்

திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம்பெற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை வாழ்த்துக் கூறினார்

திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம்பெற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை வாழ்த்துக் கூறினார்.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத்தொடரைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை முன்மொழிந்து பேசினார். அப்போது, பேரவைத் தலைவர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் நலமில்லாமல் உள்ளார். அவர் பூரண நலன் பெற்று, சட்டப் பேரவைக்கு வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவாவைத் தெரிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com