தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது.
சங்க காலத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழி வழியாகத் தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம் வரை, தமிழகம் ஒரே நாடாக விளங்கியதில்லை. எனவே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் முதல் நாளை ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாடத் தமிழக அரசு முன்வர வேண்டும்.
பிற மாநிலங்கள் அவை உருவான நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். நாமும் அவ்வாறு கொண்டாட ஆவன செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.