தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் பி.தனபால் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் பி.தனபால் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆளுநர் உரை மீது ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்குப் பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை உரையாற்றினார். 
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் உள்பட 14 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் தீர்மானத்தைத் துணை முதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com