புதுச்சேரியில் ரூ.19.42 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுககு அளித்த பேட்டியில்,
புதுச்சேரியில் கூட்டுறவு வங்களில் ரூ.19.42 கோடி விவசாய கடன் தள்ளுபடி, அரசாணை பிறப்பிப்பு. வங்களில் கடன் தள்ளுபடி மூலம் 4,092 விவசாயிகள் பயன்பெறுவர். வசதி படைத்தவர்கள் வைத்திருக்கும் சிவப்பு ரேஷன் அட்டைக்கு பதில் மஞ்சல் அட்டை வழங்கப்படும்.
நிதித்துறை செயல் தன்னுடைய துறை கோப்புகளை முடக்கி வருகிறார். குறிப்பிட்ட அரசு அதிகாரிகள், மக்களுக்கு செல்லும் நலத்திட்டங்களை தடுக்கின்றனர். துணைநிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் பாலமாக அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக புதுவை சட்டப்பேரவை தேர்தலின்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.