file photo
file photo

தொண்டர்களை இன்று சந்திக்கிறார் கருணாநிதி

பொங்கல் திருநாளையொட்டி திமுக தலைவர் மு.கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொண்டர்களைச் சந்திக்க உள்ளார்.

பொங்கல் திருநாளையொட்டி திமுக தலைவர் மு.கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொண்டர்களைச் சந்திக்க உள்ளார்.
பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடுவது கருணாநிதி வழக்கம். அன்றைய தினம் காலை 5 மணி முதல் தொண்டர்களைச் சந்திப்பார். மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக் கூறி, ரூ.10 வழங்குவார். இதற்காக புது ரூ.10 பணக் கட்டு மாற்றி வைக்கப்பட்டிருக்கும். 
இந்நிலையில் உடல் நலமின்மையால் ஓராண்டாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வரும் கருணாநிதி தொண்டர்களைச் சந்திப்பாரா என்று கேள்வி எழுந்தது. 
ஆனால், மருத்துவர்கள் ஒப்புதலுடன் கோபாலபுரம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 மணி முதல் தொண்டர்களை அவர் சந்திக்க உள்ளார். இதனால், திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பொங்கல் திருநாளையொட்டி கருணாநிதியின் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com