எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார் 

எழுத்தாளர் ஞாநி சங்கரன் காலமானார் 

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 63. 

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 63. 

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஞாநி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை காலமானார். எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன். 

பொது மக்களின் அஞ்சலிக்காக ஞாநியின் உடல் அவரது கே.கே. நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து ஞாநி சங்கரனின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com