நெய்வேலி அருகே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இன்று எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டலைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.