முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது வேதனை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2017-18-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. அதில் 2017-அண்ணா விருது- சுப்பிரமணியன், பெரியார் விருது- வளர்மதி, அம்பேத்கர் விருது -டாக்டர் கே.ஜே.ஜார்ஜ், 2018- திருவள்ளூவர் விருது- பெரியண்ணன், பெரியார் விருது- தா.ரா.காமராஜர், திரு.வி.க. விருது எழுத்தாளர் பாலகுமாரன், பாரதியார் விருது- சு.பாலசுப்பிரமணியன் என்ற பாரதிபாலன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
தந்தை பெரியார் விருது பெற்ற பா.வளர்மதிக்கு ரூ. 1 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது,
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது வேதனை அளிக்கிறது. பெரியார் விருது வழங்க அரசு என்ன வரையறை வைத்துள்ளது என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
கட்சித் தொடங்குவதற்கு முன்பே நடிகர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு குருமூர்த்தியின் பேச்சே சான்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.