சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி அளவில் சொத்து குவித்ததாக, 1997-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து,சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து அவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டிலும் அவர்களது தணடனை உறுதி செய்யப்பட்டதுடன் இருவரும் உடனடியாக சிபிஐ நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.