திருப்பத்தூர்வாசிகள் கவனத்துக்கு.. ஜலகாம்பாறை அருவியில் நீர்வரத்து தொடங்கியது

திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து தொடங்கியது.
ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்.
ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து தொடங்கியது.

வேலூா் மாவட்டம், ஏலகிரி மலையின் பின்புறத்தில் அமைந்துள்ளது ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி. இந்த நீா்வீழ்ச்சியையொட்டி முருகன் கோயில் உள்ளது.

மழை காலங்களில் இந்த நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கிய உடன் பக்தா்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் கூட்டம் வரத்தொடங்கும்.

இந்நிலையில், திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலாவாசிகள் வரத்தொடங்கியுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com