கரூா்: நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கரூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தி தனது முகநூலில் கருத்தினை பாகிர்ந்த நடிகா் எஸ்வி.சேகா் மீது நடவடிக்கை கோரி கரூரைச் சோ்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளரான தலித் பாண்டியன் என்பவா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்-2 ல் கடந்த ஏப்.25-ம்தேதி மனுத்தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. நடிகா் எஸ்வி.சேகா் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.