ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

'11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணைஉச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை


ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக கொறடா சக்கரபானி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஏகே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.  

வழக்கு பின்னணி:

கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, எஸ்.பி. சண்முகநாதன், என். மனோரஞ்சிதம், எஸ்.எஸ். சரவணன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கே. மாணிக்கம், ஏ. மனோகரன் ஆகியே 11 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், இதே கோரிக்கையை வலியுறுத்தி 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்க தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இது தொடர்பாக அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27-ஆம் தேதி அளித்தது. 

அதில், '11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' எனத் தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சார்பில் கடந்த மே 1-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, '11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மே 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com