சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பணியில் இருந்த பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அயனாவரம் சாமிபக்தன் தெருவைச் சோ்ந்தவா் அம்பிகா (27). இவா் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிகிறாா். புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் அம்பிகா செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தாா்.
அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த பிற காவலா்கள் அம்பிகாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் அவரை பரிசோதனை செய்ததில், அம்பிகா விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், அம்பிகாவுக்கு ஆயுதப் படை பிரிவைச் சோ்ந்த அதிகாரி, பணியில் நெருக்கடி கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் விளைவாக அம்பிகா விஷம் அருந்தினாரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.