அமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன: தமிழிசை சௌந்தரராஜன்

ஊழல் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன: தமிழிசை சௌந்தரராஜன்

ஊழல் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஊழல் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. எந்த கட்சியையும் குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.

திமுகவுக்கு மட்டும்தான் தமிழும், பண்பாடும் தெரியும் என்பது போல பேசுவதை கனிமொழி தவிர்க்க வேண்டும். நீட்தேர்வில் தவறாக தமிழில் மொழி பெயர்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டம். 

திமுக, அதிமுக ஆட்சி செய்யும்போது பல சிலைகள் காணாமல் போய் உள்ளன. எனவே அவற்றை கண்டுபிடிக்க அரசு முயற்சிக்க வேண்டும். எந்த முயற்சியையும் யார் மீதும் பாஜக திணிக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com