சட்ட நிறுவனங்களில் அரசியல் தலையீடு கூடாது: மு.க.ஸ்டாலின்

சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: மத்திய அரசின் ஏஜெண்டுகளையும் குறிப்பாக வருமான வரித் துறையைக் கொண்டும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையும், எதிர்க்கட்சிகளையும் திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.
இது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைகிறது. சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com