தடை நீக்கம்: குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

திருநெல்வேலி மாவட்டம், குற்றால அருவிகளில் புதன்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றால அருவிகளில் புதன்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் பகுதியில் புதன்கிழமை நாள் முழுவதும் பெய்த தொடர் சாரல் காரணமாக பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஓரளவு தணிந்ததால், பழைய குற்றாலம் அருவியிலும், பேரருவியில் ஓரமாக நின்றும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரலும், இடையிடையே லேசான வெயிலும், நாள் முழுவதும் குளிர்ந்த காற்றும் என சீசன் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com