ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் சனிக்கிழமை (ஜூலை 14) குறிப்பிட்ட நேரங்களில் முன்பதிவு நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி காரணமாக, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் சனிக்கிழமை (ஜூலை 14) குறிப்பிட்ட நேரங்களில் முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை முன்பதிவு நிறுத்தப்படுகிறது. இதேபோல, சனிக்கிழமை இரவு 11.45 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை15) அதிகாலை 1.20 மணி வரை முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
இந்த நேரங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திலும் டிக்கெட் முன் பதிவு செய்யவோ, முன்பதிவை ரத்து செய்யவோ முடியாது. மேலும், 139' என்ற விசாரணை மையத்தையும் தொடர்பு கொள்ள முடியாது.
இதன்படி, தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வேயில் இருந்து புறப்படும் ரயில்களுக்கும் முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது.
இந்த ரயில்வே மண்டலங்களை தவிர்த்து, பிற ரயில்வே மண்டலங்களில் இருந்து இந்த ரயில்வே மண்டலத்துக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
பராமரிப்புப் பணியின் காரணமாக, குறிப்பிட்ட இந்த மண்டலங்களில் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. இத் தகவலை தெற்கு ரயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com