தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை: மக்களவை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை: மக்களவை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை; திராவிட கட்சிகளே வெற்றி பெறும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சியமைக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். 

பா.ஜ.கவின் ஆசையை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்லை.  8 வழிச்சாலையில் உள்ள பிரச்னைகள் முதல்வருக்கு தெரியும். அதில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். 

மதுரை கூட்டம், தேர்தல் பிரச்சார கூட்டம் என முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அரசின்  திட்டங்களையே எடுத்துக்காட்டாக கூறி வருகின்றோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com