நாளை திறந்தநிலை பல்கலை. வேலைவாய்ப்பு முகாம்

திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனுக்காக, முதன்முறையாக ஒரு நாள் வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை நடத்துகிறது.

திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனுக்காக, முதன்முறையாக ஒரு நாள் வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை நடத்துகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் உள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள், இந்நாள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடத்தப்பட உள்ளது. இதில் 50 தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணிக்கான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள், அன்றைய தினம் காலை 9 மணிக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முகாம் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரனை 044 - 2430 6611, 94877 00180 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com