பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு முட்டை கொள்முதல் செய்தால் ரூ.5,000 கோடிக்கு எப்படி முறைகேடு நடக்கும்?. முட்டை கொள்முதல் விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றி மாற்றி பேசுகிறார்.
பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்.
வருமான வரி சோதனைக்கும் அதிமுக- பாஜக உறவிற்கு தொடர்பில்லை. மாநிலத்தின் வளச்சிக்காக மட்டுமே மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருகிறோம். ஆனால் கட்சி ரீதியாக எந்த உறவும் கிடையோ. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.