பட்டுச் சேலை வாங்கணுமா? அதுவும் ஆடித் தள்ளுபடியில் வாங்கணுமா?

ஆடி மாதம் பிறந்தாலே துணிக் கடைகளில் ஆடித் தள்ளுபடிகளும் பிறந்து விடும். ஒன்று எடுத்தால் இரண்டு இலவசம் முதல் 50 சதவீத விலைத் தள்ளுபடி என பல கண்கவர் சலுகைகளை அறிவிக்கும் மாதமிது.
பட்டுச் சேலை வாங்கணுமா? அதுவும் ஆடித் தள்ளுபடியில் வாங்கணுமா?

ஆடி மாதம் பிறந்தாலே துணிக் கடைகளில் ஆடித் தள்ளுபடிகளும் பிறந்து விடும். ஒன்று எடுத்தால் இரண்டு இலவசம் முதல் 50 சதவீத விலைத் தள்ளுபடி என பல கண்கவர் சலுகைகளை அறிவிக்கும் மாதமிது.

மற்ற தனியார் நிறுவனங்களுக்கு இணையாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பட்டுச் சேலைகளுக்கான ஆடித் தள்ளுபடி மற்றும் சிறப்புக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கைத்தறி நெசவுத் தொழிலானது, இலட்சக்கணக்கான கிராமபுற / புறநகர் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும், குறைந்த முதலீட்டில் வேலைவாய்ப்பளிக்கும் தொழிலாக விளங்குவதுடன், இந்திய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை பிரதிபலிக்கும் தனித்துவமிக்க கலையாகவும் விளங்கி வருகிறது. இவற்றுள் அற்புதமிக்க வடிவமைப்புகள், எண்ணற்ற வண்ண சேலை இரகங்கள் சங்கமிக்கும் இடமாக ஆடி பண்டிகையினை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் 19.07.2018 முதல் 29.07.2018 வரை ஸ்ரீசங்கரா அரங்கம், ட்டி.ட்டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டையில் நடைப்பெறும் “பட்டு சேலைகளுக்கான ஆடி தள்ளுபடி சிறப்பு கண்காட்சியினை“ 19.07.2018 அன்று காலை 10.30 மணியளவில் கைத்தறி மற்றும் துணிநூல்  இயக்குநர் ச.முனியநாதன் துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இக்கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு  சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தூய சரிகை பட்டு சேலைகள், காஞ்சிபுரம் நூல் வேலைப்பாடு பட்டு இரகங்கள், ஆரணி பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தாராசுரம் பட்டு, சேலம் பட்டு சேலைகள் மற்றும் மென்பட்டு சேலைகள் இக்கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டு, சுமார் 7000-க்கும் மேற்பட்ட பட்டு சேலைகளும், 1000-ற்கும் மேற்பட்ட பட்டு வேட்டிகளும் மற்றும் பட்டு பாவாடைகளும் பிரத்யேகமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலைகளுக்கான இச்சிறப்பு கண்காட்சி 19.07.2018 முதல் 29.07.2018 முடிய தினமும் காலை 10.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நடைபெறும். இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் சேலை இரகங்களுக்கேற்ப 55 விழுக்காடு வரை ஆடி சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்திற் கொண்டு, ரொக்க விற்பனையுடன்,  கிரெடிட் / டெபிட் கார்டு பயன்படுத்தும் வசதியும் இக்கண்காட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், தரமான பட்டாடைகளை ஆடித் தள்ளுபடியில் வாங்க விரும்பினால் இந்த நல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com