சென்னை கந்தன் சாவடியில் கட்டட சாரம் இடிந்து விபத்து - 23 பேர் மீட்பு

சென்னை கந்தன் சாவடியில் கட்டட சாரம் இடித்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
சென்னை கந்தன் சாவடியில் கட்டட சாரம் இடிந்து விபத்து - 23 பேர் மீட்பு

சென்னை கந்தன் சாவடியில் கட்டட சாரம் இடித்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சென்னை கந்தன் சாவடியில் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடத்தின் சாரம் மற்றும் தூண் திடீரென சனிக்கிழமை இரவு இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து தீயனைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர். 

இந்த விபத்தில் 30-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. அதில், தற்போதைய நிலையில் 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 90 வீரர்கள் கொண்ட கமாண்டோ குழுவும் வரைவழைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com